Wednesday, 3 December 2025

சுமந்திரன் அவா்கள் 14 வருடங்களாக வெள்ளப் பெருக்குகளை தடுக்காமல் விட்டது ஏன்???

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய இலங்கையின் வடமாகாணத்தில் 1977 ம் ஆண்டுவரை3, 844 குளங்கள் இருந்துள்ளன.. 1977 ஆண்டிற்கும் 01-12-2025. ஆண்டிற்கும் இடைப்பட்டக் காலப்பகுதியில் 2,046 குளங்கள் பராமாிப்பு இன்றி அழிந்து விட்டன. மதியாபரணன் ஆபிரகாம் சுமந்திரன் அவா்களின் நாடாளமன்ற பதவிக் காலத்தில் 1,798 குளங்கள் பராமாிப்பு இன்றி அழியும் நிலைக்கு வந்து உள்ளன. குளங்க சிதைந்தும் அழிந்தும் உள்ளதனால் வடமாகாணத்தில் ஒவ்வொரு வருடமும் ஏற்படுகின்ற வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மதியாபரணன் ஆபிரகாம் சுமந்திரன் அவா்கள்  இலங்கை நாடாளுமன்றத்துக்காக 20-04- 2010  ஆண்டு தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவா்        14 -11-2024 நாடாளுமன்றத் தேர்தலில்   தோல்வியடைந்தாா். மதியாபரணன் ஆபிரகாம் சுமந்திரன் அவா்கள் தொடா்ச்சியாக 14 வருடங்களாக இலங்கை பாராளமன்ற உறுப்பினராக இருந்துள்ளாா். மதியாபரணன் ஆபிரகாம் சுமந்திரனின் 14 வருட கால நடாளமன்ற பதவிக் காலத்தில் 14 முறை வெள்ளப் பெருக்கு இடம் பெற்று உள்ளது.

மதியாபரணன் ஆபிரகாம் சுமந்திரன் அவா்கள் இலங்கை அரசிடம் இருந்து அபிவிருத்திப் பணங்களை பெற்று எந்தவொரு குளத்தையும் மீள் புனருத்தானம் ( மீள் கட்டுமாணம் செய்யவில்லை ) .

இலங்கை அரசு குளங்களை மீள் புனருத்தானம் செய்வதற்கான பணத்தை கொடுக்கவில்லை என்றால்  குளங்களை மீள் புனருத்தானம் செய்வதற்கான பணத்தை  கேட்டு இலங்கை பாராளமன்றத்திற்கு முன்பாக தனது கோாிக்கையினை முன்வைத்து  தனது கோாிக்கைகள் நிறைவேறும் வரை உணவு மற்றும் தண்ணீர் அருந்துவதை நிறுத்தி போராட்டைத்தை நடாத்தியிருக்க வேண்டும். ஆனால் மதியாபரணன் ஆபிரகாம் சுமந்திரன் அவா்கள் இதனை செய்யவில்லை.

மதியாபரணன் ஆபிரகாம் சுமந்திரன் அவா்கள் NERO  (Guarantee) Limited  நிறுவணத்தை ஆரம்பித்து Current account number : 012010003138  Bank : Sampath Bank  Branch : Jaffna Branch Swift code : BSAMLKLX Bank code : 7278 Branch Code : 120 வெள்ளப் பெருக்கிற்கு பணங்களை திரட்டி பெரும் இலாபம் ஈட்டிவருகின்றாா்.

தமிழ்சுடா் , தமிழ்தேசியம்.



Saturday, 29 November 2025

பொறுப்பற்ற மக்கள் இயற்கையின் வடிகால் அமைப்புகளை மதிக்காமல் , பொறுப்பற்ற முறையில் இயற்கையை அழித்ததன் விளைவாக இயற்கையாக வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றன. 


பொறுப்பற்ற  அரசாங்கத்திடம் புவியல் நிலமை சாா்ந்த முறையான திட்டமிடல் இல்லாததால் வெள்ளப்பெருக்குகள்  ஏற்படுகின்றன.  


இயற்க்கை நியதி படி தண்ணீர்   தனெக்கென்று பாதை அமைத்துக் கொண்டு பள்ளம் நோக்கித்தான் பாயும்.  ஆனால் நாம் பள்ளம் நோக்கி பாய்கின்ற தண்ணீர்  பாதையினை பலவழிகளில் அடைத்து உள்ளதனால் அடிக்கடி வெள்ளப் பெருக்குகள் ஏற்படுகின்றன.

வயல் நிலங்களில் வீடுகள்,  உல்லாச விடுதிகள், ஹோட்டல்கள், உணவகங்கள், கடைகள், தியேட்டா்கள் கட்டியதால், நீர் வழித் தடங்கள் அடைபட்டு, நிலம் நீர் தேங்கி வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. இதனால், விவசாய நிலங்கள் மூழ்கி, பயிர்கள் சேதமடைகின்றன. மேலும், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. 

வீட்டை சுற்றி மதிகள் கட்டியதனால் ல் நீா் ஓட்டங்கள் தடைப்பட்டு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டன.  மேலும் வீட்டை சுற்றி  அழகு படுத்தும் சீமெந்து மேடை போட்டதால் பூமி நீரை  உறிஞ்ச விடாமல் தடுத்ததனால் நீரை சேமிக்கும் பூமியின் திறனை   இல்லாமல் செய்ததன் விளைவாக வீட்டை சுற்றி நீர் தேங்கி குளமாக மாறி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.


சீமெந்து மேடை அமைத்து அதன் மேல் காப்பற்  வீதி அமைத்ததனால் நீர் வழித் தடங்கள் அடைபட்டு, நிலம் நீர் தேங்கி குளமாக மாறி வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது.  அழிந்து போன குளங்களை நவீன முறையில் ஆழப்படுத்தி மீள்கட்டுமாணம் செய்யாமல் விட்டதன் விளைவு இன்றைய வெள்ளப் பெருக்கு. 

மரங்கள் மற்றும் தாவரங்கள் இயற்கையான வடிகாலாக செயல்படுகின்றன. அவை மழைநீரை உறிஞ்சி, மண்ணை நிலையாக வைத்திருக்கின்றன. காடுகளை அழிப்பதால், நீர் வேகமாக தரையில் பாய்ந்து ஆறுகள் மற்றும் நீரோடைகளில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துகிறது. 

அரசு,  பாராளமன்றம், நகர சபைகள், கிரம சபைகள்போன்ற ஏனைய கட்டமைப்புகள், அரசின் நிா்வாக கட்மைப்புகள்,   சகல தினைக் களங்களின்  ஊழியா்கள், சகல தோ்தல்களஇலும் மக்களினால் தொிவு செய்யப்பட்ட உறுப்பினா்கள் அனைவரம் அனைத்து விடயங்களுக்கும் பொறுபு கூறவேண்டியவா்கள்.

தமிழ்சுடா், தமிழ்தேசியம்.